கோவையில் செட்டிப்பாளையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த வருடம் 3வது ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகளுக்கும் காளையர்களுக்கும் இடையேயான மல்லுக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் முதல் காளையாக கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் காளை வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது.
மேலும் அதைத்தொடர்ந்து பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி பாய்ந்தன. இதில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், பீரோ உள்ளிட்டவை பரிசாக வழங்கப்படுகிறது. 3வது ஆண்டாக நடைபெறும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…