ஜல்லிக்கட்டு போட்டிகள்… 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு – அமைச்சர் மூர்த்தி

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது. இதனை கண்டு ரசிக்க ஒரு கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டது.

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஆகியவற்றில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய madurai.nic.in என்ற இணையதளத்தில் இன்று வரை முன்பதிவு செய்யலாம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,176 காளைகள் மற்றும் 4,514 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதில், அலங்காநல்லூர் 6,099, பாலமேடு 3,677, அவனியாபுரம் 2,400 காளைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  இதுபோன்று, அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,318 மாடுபிடி வீரர்களும், பாலமேட்டில் 1,412, அவனியாபுரத்தில் 1,734 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், அலங்காநல்லூரில் அரங்கம் திறக்கப்பட்ட பின் 5 நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

29 minutes ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

3 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

3 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

4 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

15 hours ago