மாடுகளுடன் மல்லுக்கட்ட துவங்கியது மஞ்சுவிரட்டு.. காளைகளும் காளையர்களும் புகுந்து விளையாட தொடங்கினர்.. அவனியாபுரத்தில் அட்டகாசம்…

Published by
Kaliraj
  • இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி முதலாவதாக அவனியாபுரத்தில்.
  • தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு வெகு ஆரவாரத்தோடு துவங்கியது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த  ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு இன்று அதாவது ஜனவரி 15 அவனியாபுரத்தில் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக திருப்பரங்குன்றம்  முதல் அவனியாபுரம் சாலையில் வாடிவாசல் மேடை வரை  இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  ஜல்லிக்கட்டை, உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திரு. மாணிக்கம் அவர்கள்  தலைமையிலான குழு, கண்காணித்தனர்.மேலும் இந்த விழாவில், வருவாய்,பேரிடர்,தொழில்நுட்ப துறைகளின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாட்டை பார்வையிட்டனர். இந்த போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை  வழங்கப்பட்டிருந்தன. 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டி துவங்குவதற்கு முன்னர், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதை தொடர்ந்து போட்டி துவங்கியது.

Published by
Kaliraj

Recent Posts

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

18 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

47 minutes ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…தகுந்த பதிலடி அளிக்கப்படும்! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…

3 hours ago