அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எச்சரிக்கை.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது
இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஈபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து இல்லாததால் அது செல்லாது.
பொதுக்குழு அழைப்பிதழை தன்னிச்சையாக யாரும் அனுப்ப முடியாது; அப்படி யாரும் அனுப்பினால் அது செல்லாது எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிடுகின்றனர். அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் சர்க்கஸில் குழந்தைகளை சிரிக்க வைக்கும் கோமாளி போல பேசுகிறார். ஜெயக்குமார் தான் அதிமுகவை அழித்து வருகிறார். ஜெயக்குமாரை கைது செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…