ஓபிஎஸ்-ஐ பேச ஜெய்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை..! விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவடுவார் – கோவை செல்வராஜ் எச்சரிக்கை

Default Image

அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எச்சரிக்கை. 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது

இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஈபிஎஸ் தரப்பு அழைப்பு  விடுத்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஜூலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கான அழைப்பிதழில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்து இல்லாததால் அது செல்லாது.

பொதுக்குழு அழைப்பிதழை தன்னிச்சையாக யாரும் அனுப்ப முடியாது; அப்படி யாரும் அனுப்பினால் அது செல்லாது எடப்பாடி பழனிசாமிக்கு துதி பாடும் குழுவைத்தான் ஜூலை 11ம் தேதி நடத்த திட்டமிடுகின்றனர். அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் சர்க்கஸில் குழந்தைகளை சிரிக்க வைக்கும் கோமாளி போல பேசுகிறார். ஜெயக்குமார் தான் அதிமுகவை அழித்து வருகிறார். ஜெயக்குமாரை கைது செய்ய நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்