ஜெ. தீபா அவர்கள் தன்னை அதிமுக வில் இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு, ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா அவர்கள் எம்.ஜி.ஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற தனி கட்சி ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று திடீரென தான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க போவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக, அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், அதிமுக என்பது பெரிய அணை என்று தீபா அவர்கள் தற்போது தான் உணர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார். எனவே, தீபா அவர்கள் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் தன்னை அதிமுகவில் இணைந்து கொள்வதாக அறிக்கை விடலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தினகரன் என்பவர், உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல என்றும் அவரிடம் இருக்கும் கருப்பு பணத்தை வைத்து பெரிய அரசியல்வாதி என்ற செயற்கையான பிம்பத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…