8 மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என முதல்வர் பேச்சு.
பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி. கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது.
தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்திற்கும் கிடைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த நுழைவுத்தேர்வு எந்த வகையிலும் நுழைய கூடாது என்பதே நமது கொள்கை. ஆளுநரிடம் நம் கேட்பது ஒப்புதல் இல்லை, முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கேட்கிறோம். 8 மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என்று விமர்சித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…