‘இலங்கை போன்று இங்கும் நடக்கும்’ – பாஜக மக்களை முட்டாளாக்க நினைக்கிறது – ஜோதிமணி எம்.பி

Default Image

பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிசெய்கிறது.

ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பதாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிசெய்கிறது. இதே மத,இனவாத அரசியல்தான் இலங்கை மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடச் செய்திருக்கிறது. அதுவே இங்கும் நடக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்