ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே அதிமுக தான் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Default Image

அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. 

அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து தெரிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆணையம் கூறியது உண்மை. குற்றம் செய்யவில்லை என்றால் இவர்களெல்லாம் எதற்காக பயப்படுகிறார்கள். குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும்.

ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லாதது. திமுக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழக திராவிட இயக்க அரசியல் சிறப்பாக வளர்ந்து வருகிறது.

தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை விட அற்புதமாக வளர்ந்துள்ளது. ஆளுநர் தமிழிசை இந்த வளர்ச்சியை அங்கு சென்று அவர் கூற வேண்டும். தமிழிசை ஆளுநர் பதவியின் மரியாதை மற்றும் மாண்பை பொதுமக்கள் மத்தியில் கெடுத்து வருகிறார் என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்