திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி
திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என ஈபிஎஸ் குற்றசாட்டு.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார்; அது உங்கள் பணம் அல்ல. மக்கள் பணம். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் கொடுப்பது எப்போது என கேட்கும்போது அமைச்சர் துரைமுருகன் நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார்; திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.