திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி

Default Image

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என ஈபிஎஸ் குற்றசாட்டு.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிவகாசியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்திருக்கிறது; தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளமிட்டது அதிமுக. திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் சொல்கிறார்; அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார்; அது உங்கள் பணம் அல்ல. மக்கள் பணம். இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் கொடுப்பது எப்போது என கேட்கும்போது அமைச்சர் துரைமுருகன் நக்கலாக சில்லரை மாற்றுகிறோம் என கூறுகிறார்; திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடாவடியில் ஈடுபடுகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்