அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனிடம், நான் சொல்வதை எல்லாம் முதல்வர் பழனிசாமி செய்து வருவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டிக்கிறார் என்ற கேள்விக்கு, அப்போ அதிமுகவும், அரசாங்கமும் கவனமாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்துள்ளார். அதிமுகவின் திட்டத்தை யாரோ வெளியிடுகிறார்கள், அதனால் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, அதற்கு முன், பின் வரக்கூடிய ஓரிரு நாட்களுக்குள் இதெல்லாம் முடியும் என்று சாத்தியப்படும் போது சொல்கிறது வேறு, நாங்கள் வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று கூறிக்கொண்டு வருவது வேறு என விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்யப்பட்டது என்றும் விவசாயிகள் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறி நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது யாரு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைக்கு எல்லாரும் வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை கொன்றது திமுக தான் என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவிற்கு இருக்கும் மிக பெரிய பட்டப்பெயரே செய்யக்கூடிய ஊழல் வெளியே தெரியாத வகையில் விஞ்ஞான பூர்வமாக செய்வார்கள் என தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொண்டுவர கூடிய திட்டங்கள் முன்கூட்டியே தெரியுது என்றால், அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சசிகலா வருகை அந்த நாளில் எழுச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…