எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும்.
எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (13.01.2022) நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக, நேற்று மட்டும் சென்னையில் 6484 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இக்கூட்டத்தை நடத்துவது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டப் பின்னரே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற வேண்டும். நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு உடன்பாடில்லை என்றாலும் இக்கோரிக்கையை மீறி நடைபெறுமாயின் பெருந்திரளாக கூட்டத்திற்கு வருவதை தவிர வேறுவழியில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…