மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி.ரெய்டு நிறைவு…! எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை…!

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல்.

சென்னை, நீலாங்கரையில் உள்ள, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகனின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு திமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சோதனை 12 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சோதனையில், எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், மேலும் வீட்டு செலவிற்காக வைத்திருந்த ரூ.1.36 ஆயிரம் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்பித்ததால், அந்த பணத்தையும் வருமான வரித்துறையினர்  விட்டு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்