Minister Senthil balaji [File Image]
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு தற்போது 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து புழல் சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதய அறுவை சிகிச்சைக்காக நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு நேற்று அமைச்சர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதே போல, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உய்ரநீதிமன்றத்தில் அவரது குடும்பத்தார் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்கான கோரிக்கை பற்றிய நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா ? அல்லது அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…