அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியானது கணிப்பு கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு – முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

நேற்றுடன் மக்களவை தேர்தல் முடிவுபெற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சேலத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியான கணிப்பு கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று கூறினார்.மேலும் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது .இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

வறட்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.குடிநீர் பிரச்சனையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்