தலைமைச் செயலாளராக இருப்பதால் படைப்பிற்கு பரிசு பெறுவது ஏற்புடையதல்ல – இறையன்பு

Published by
லீனா

தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். 

2021 ம் ஆண்டு சிறந்த நூலாக தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளராக இருப்பதால் பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது, தனக்கு வழங்கும் பரிசை தவிர்க்குமாறு தமிழ்வளர்ச்சித்துறைக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், 2018ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று தெரிவுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூலாசிரியர் மற்றும் அதன் பதிப்பகத்தார்களுக்கு பரிசுகள் வழங்க கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8ஆம் நாள் பார்வையில் காணும் அரசாணையில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், அதன் வகைப்பாடு, நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனில், என் நூலான “மூளைக்குள் சுற்றுலா” தெரிவு செய்யப்பட்டு, நாளை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தமிழக அரசிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தெரிவு செய்யப்பட்ட எனது படைப்பிற்கு, இவ்வாண்டு நடைபெறும் விழாவில் தலைமைச் செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனது படைப்பிற்கு வழங்கப்பெறும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago