பள்ளிகள் திறந்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தவறான கருத்து – அமைச்சர் சுப்பிரமணியன்

Published by
லீனா

பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கைக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல். பள்ளிக்கு வந்த அன்றே தொற்று ஏற்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர்களுக்கு ஏற்கனவே தொற்று பாதிப்பு இருந்திருக்கும். எனவே, பள்ளிக்கு வந்த பின் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொற்று பரவாமல் இருக்க உடனடியாக அவர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். தொற்று கண்டறியப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

திடீரென வந்திறங்கிய விஜய்.., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

திடீரென வந்திறங்கிய விஜய்.., அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…

34 minutes ago

SRH, மும்பையை அடுத்து ‘கம்பேக்’ கொடுக்குமா CSK? ருதுராஜுக்கு பதில் இவரா?

சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…

53 minutes ago

நீயே ஒளி : தமிழ் மொழிக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…

2 hours ago

தமிழ்ப்புத்தாண்டு 2025 : கோயில்களில் சிறப்பு பூஜைகள்.., பக்தர்கள் சாமி தரிசனம்!

சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…

2 hours ago

DC vs MI : வெற்றிப் பாதையில் மும்பை.., முதல் தோல்வியில் டெல்லி! முக்கிய சம்பவங்கள் இதோ…

டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…

3 hours ago

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

15 hours ago