ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.? உண்மை நிலவரம்…

Published by
மணிகண்டன்

சென்னை: ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ஃ பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எந்தவித பாகுபாடும் பார்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிரபல செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு வேலை, ஊதியம், பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் பார்க்கப்டுகிறது என குற்றசாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றசாட்டுகளை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) , ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி நியமனம் குறித்த உண்மை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

இந்த உத்தரவை அடுத்து, சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் தலைமையில், 5 பேர் கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் குழு ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு பணிபுரியும் 21 திருமணமான பெண் ஊழியர்களிடம் முழுமையான விசாரணையை இந்த குழு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில், அனைத்து ஊழியர்களும் ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்தவிதமான பாரபட்சத்தையும் சந்திக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும், பாரபட்சம் காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

3 minutes ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

21 minutes ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

37 minutes ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

41 minutes ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

55 minutes ago

என்னங்க வீட்லயே அடிக்கிறீங்க..? சொந்த மைதானத்தில் மோசமான சாதனை படைத்த பெங்களூர்!

பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…

1 hour ago