ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.? உண்மை நிலவரம்…

Published by
மணிகண்டன்

சென்னை: ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ஃ பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எந்தவித பாகுபாடும் பார்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிரபல செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு வேலை, ஊதியம், பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் பார்க்கப்டுகிறது என குற்றசாட்டுகள் எழுந்தன.

இந்த குற்றசாட்டுகளை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) , ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி நியமனம் குறித்த உண்மை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

இந்த உத்தரவை அடுத்து, சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் தலைமையில், 5 பேர் கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் குழு ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு பணிபுரியும் 21 திருமணமான பெண் ஊழியர்களிடம் முழுமையான விசாரணையை இந்த குழு மேற்கொண்டது.

ஆய்வின் முடிவில், அனைத்து ஊழியர்களும் ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்தவிதமான பாரபட்சத்தையும் சந்திக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும், பாரபட்சம் காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

4 seconds ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

23 minutes ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

45 minutes ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…

2 hours ago

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

10 hours ago