ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.? உண்மை நிலவரம்…

சென்னை: ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ஃ பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எந்தவித பாகுபாடும் பார்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிரபல செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு வேலை, ஊதியம், பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் பார்க்கப்டுகிறது என குற்றசாட்டுகள் எழுந்தன.
இந்த குற்றசாட்டுகளை அடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) , ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி நியமனம் குறித்த உண்மை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது
இந்த உத்தரவை அடுத்து, சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் தலைமையில், 5 பேர் கொண்ட தொழிலாளர் துறை அதிகாரிகள் குழு ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மத்தியில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு பணிபுரியும் 21 திருமணமான பெண் ஊழியர்களிடம் முழுமையான விசாரணையை இந்த குழு மேற்கொண்டது.
ஆய்வின் முடிவில், அனைத்து ஊழியர்களும் ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்தவிதமான பாரபட்சத்தையும் சந்திக்கவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும், பாரபட்சம் காட்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025