ஆயுதப்பூஜைக்கு 500க்கு அதிகமான பேருந்துகள்-போக்குவரத்து துறை திட்டவட்டம்!

Published by
Kaliraj

ஆயுதபூஜைக்கு வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துதுறை  திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் கடந்த 6 மாதமாக இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் ஊரடங்கு  தளர்வுகளுக்கு பிறகு மீண்டும்  இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தலைநகர் சென்னையில் மட்டும் 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போல் வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின்  வசதிக்காக 600 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அக்.,25ம் தேதி ஆயுதபூஜை நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. அக்.,26 விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அக்.,24 சனிக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக வருகிறது என்று பலரும் அக்.,23ந்தேதியே தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  திட்டமிடுவார்கள். குறிப்பாக நீண்ட தூரம் செல்ல விரும்பும் பயணிகள் இதில் அதிகமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

மேலும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது  குறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.அதே போல் ரயில் போக்குவரத்தும் கனிசமாக இல்லை. சிறப்பு  ரயில்கள் மட்டும்தான் தற்போது இயக்கப்பட்டு  வருகிறது.இதனால் மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளை நம்பித்தான் பயண செல்ல வாய்ப்புள்ளது.

இவர்களின் வசதிக்காக சிறப்பு  பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்நிலையில் கோரிக்கைகளை ஏற்ற போக்குவரத்து கழக அதிகாரிகள்   நீண்ட தூர சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு  ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்: ஊரடங்கு தளர்வுக்கு பின் பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறைவான பயணிகளே முதலில் பயணித்தனர். ஆனால் தற்போது எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் அக்.,25ந்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளதால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்குவது  ஆலோசனை நடத்தி வருகிறோம். பயணிகளின் வருகையை பொறுத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு  பேருந்துகளை இயக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற  இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

 
Published by
Kaliraj

Recent Posts

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

58 minutes ago
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

2 hours ago
ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

3 hours ago
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

3 hours ago
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…

3 hours ago
”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!

”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!

சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…

4 hours ago