சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் முறைகேடுகள் நடப்பதாக குவிந்த புகாரை அடுத்து சிபிஐ விடியவிடிய சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகளை குறைத்து நிர்ணயம் செய்து வரிவிதிப்பதாகவும்,வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றனர் என்று சுங்க அதிகாரிகள் சிலர் மோடி செய்வதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில் சரக்கு முனைத்திற்கு விரைந்த சிபிஐ ஆவணங்களை அனைத்தையும் சோதனை செய்தனர்.மேலும் சுங்க அதிகாரிகளிடமும் இது குறித்து விசாரணை
நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை மாநிலம் கேரளாவில் தங்கக் கடத்தல் தகராறு பல கிளைகளாக சென்று கொண்டே இருக்கிறது.
புலனாய்வு துறையும் துப்பு துலங்கி கொண்டே வருகிறது.இந்நிலையில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.கேரள தலைமை செயலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில் இவ்விசாரணை தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது இவ்வாறு இருக்க புகார் எழுந்த சுங்கத்துறை அதிகாரிகள் அனைவரையும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…