திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Default Image

திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, சித்ரவதைக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மட்டுமின்றி அவருடைய உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் எரித்தது சர்ச்சையாகியது.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக பல இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நேற்று திமுக எம்பி கனிமொழி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இந்நிலையில் மெழுகுவர்த்தி ஏந்தி  ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி,சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட பிரிவின் கீழ் இவ்வழக்கு  கனிமொழி உள்பட 191 பேர் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்  திமுக எம்.பி கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்