கோவை ஈஷா யோகா மையம் கல்வி நோக்கத்திற்காக கட்டப்பட்டுள்ளதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டி இருப்பதாக தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் முறையீடு செய்தது
இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.
ஈஷா யோகா மையமானது, கல்வி நோக்கத்தில் கட்டடங்களை கட்டியுள்ளதால், அதில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் போன்ற இடங்கள் இருப்பதால் சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ‘ நீங்களே சட்டங்களை போட்டுவிட்டு, அதற்கு நீங்களே விலக்கு அளிப்பது ஏன்.?’ எனவும், இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…