திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக ஆட்சியர் சிவராசு பேட்டி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகளைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருச்சியில் மொத்தம் 51 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 46 பேர் இந்த வைரஸ் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 22-ம் தேதிக்கு பின் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், வெளி மாநிலங்களில் அல்லது மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குட்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு நகர்ப்புற பகுதிகளில் நாளையுடன் 14 நாட்கள் நிறைவடைந்துள்ளதாகவும், கிராமப்புற பகுதிகளில் மே -7ம் தேதி 14 நாட்கள் நிறைவடைவதாகவும் கூறியுள்ளார். ஆரஞ்சு மண்டலமாக திருச்சி மாற்றப்படுவது குறித்து, தமிழக முதல்வர் ஆலோசனை செய்து கூறுவார் என ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…