பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனையின் போது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன் ஒருவர் போலீசாரால், தாக்கப்படும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது ஏவப்பட்ட சோதனையின் போது நமது அம்மா நாளிதழ் தாக்கப்பட்டது, இன்று முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள் மீது நடத்தப்படும் சோதனையின் பொழுது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன், திரு.ஆண்ட்ரூஸ் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்துகின்றனர், இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…