பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனையின் போது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன் ஒருவர் போலீசாரால், தாக்கப்படும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது ஏவப்பட்ட சோதனையின் போது நமது அம்மா நாளிதழ் தாக்கப்பட்டது, இன்று முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள் மீது நடத்தப்படும் சோதனையின் பொழுது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன், திரு.ஆண்ட்ரூஸ் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்துகின்றனர், இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…