பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமா?

Published by
பாலா கலியமூர்த்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு தமிழரின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குரல் எழுப்பி வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். தற்போது உடல்நலக்குறைவால் பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

பேரறிவாளன் பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால் ஜாமீன் வழங்க கோரி அவரது தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர்களுக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்றது.

இதன்பின்னர் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது. பேரறிவாளன் 32 ஆண்டுகளாய் சிறையில் இருக்கிறார் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தவர், சிறையில் நல்லபடியாக நடந்து கொண்டுள்ளார். பரோலில் வந்த போதும் நடத்தை சரியாக உள்ளது. மருத்துவத் தேவை இருக்கிறது மற்றும் சிறையில் படிப்பைத் தொடர்ந்துள்ளார் என பேரறிவாளனுக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க இதுதான் காரணமான விஷயங்கள் என கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

47 minutes ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

1 hour ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

2 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

4 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

4 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

4 hours ago