இதுதான் சமூக நீதியா..? இங்கேயே சமூக நீதியை பாதுகாக்க முடியவில்லை – எடப்பாடி பழனிசாமி

Published by
murugan

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் வீரபாண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  வன்னியர்களுக்குக்கான 10.5% உள்இட ஒதுக்கீடு ரத்துக்கு திமுகவே காரணம்.  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதடவில்லை. அதேபோல இந்த வழக்கில் முழு தரவுகளை(விவரங்கள்) அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை.

அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக அரசு செயல்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டது ஒரு கண்துடைப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த அரசு அதிகாரியை ஒரு அமைச்சர் ஜாதி சொல்லி திட்டுகிறார். அந்த அதிகாரி மனமுடைந்து ஊடகங்கள் மூலமாக தனது மன அழுத்தத்தை தெரிவிக்கிறார். அவரை பதவியிலிருந்து நீக்காமல் வேறு துறைக்கு முதல்வர் மாற்றியிருக்கிறார்.

எப்போது பார்த்தாலும் சமுகநீதிக்கு பாடுபடுவதாக முதல்வர் கூறுகிறார். இதுதான் சமூக நீதியா..? இங்கேயே சமூக நீதியை பாதுகாக்க முடியவில்லை. இவர் இந்தியா முழுவதும் சமூக நீதியை பாதுகாக்க போகிறாராம். தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது.

 

 

Published by
murugan

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago