பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? கமல்ஹாசன் எதிர்ப்பு..!

Published by
murugan

சென்னையில் கடந்த 2015-ல் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், கூவம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பொது மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக கூவம் ஆற்றை தூர்வாரவும், மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூவம், அடையாறுகளின் 1,000 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை இடித்து விட்டு இங்கிருக்கும் மக்களை சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மறுகுடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் தங்கள் குழந்தைகள் படிப்பதாக கூறி சில குடும்பங்கள் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அவர்களுக்கு கால அவகாசம் வழங்கியது.

நேற்று குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் கூவம் ஆற்றுக்குள் இறங்கி நின்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என தெரிவித்துள்ளார்.

Published by
murugan
Tags: kamalhasan

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

10 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

11 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

11 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

12 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

12 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

13 hours ago