அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? சசிகலா சரமாரி கேள்வி..!

Published by
லீனா

தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை.

தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் தை மாத மாற்றப்போல் வரும் செய்டுகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்வோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வந்ததாக தெரியவில்லை பின் ஏதற்காக, இது. போன்ற செய்டுகள் பரப்பப்படுகின்றன என்பது புரியாத புதிராக உள்ளது அதேபோல் கடந்த வாரத்தில் மதுரை ஜெய்ஹிந்தியாத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று முன்னாள் முதல்வர்  அவர்களின் படம் வைத்த செய்திகள் பின்னர் மறுநாளே அகற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

இது போன்ற செயல்கள் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறதா? இல்லை அவருக்கு தெரியாமலேயே எதாவது ஒரு அதிகாரம் மையத்தின் தலையீட்டால் நட்க்கிறதா? அல்லது அரசு இயந்திரம் முதல்வரின் கட்டுப்பாட்டிலே இல்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகாமமக்களுக்கு தொடர்ந்து எழுவதாக சொல்கிறார்கள்

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டு பதற்காக சித்திரை  மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்பதற்கு சரியான விளக்கத்தை ஆதாரங்களுடன் அன்றே தெரிவித்து இருக்கிறார். அதை சரியாக புரிந்து கொண்டாலே போதும், மக்களை குழப்புபவர்களும் தெளிவடைவார்கள் எனவே இது போன்று மக்களுக்கு உதவாத செயல்களில் ஈடுபடுவதில் தங்கள் நேரத்தை செல்விடுவதை தவிர்த்து குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வழி வகை செய்தாலே போதும் அதுவே மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். ஆகையால், தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு விட்டு விட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்கள் நேரத்தை செலவழித்து. மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

20 mins ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

6 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

7 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

12 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

23 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago