மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நிதிகளை அறிவித்து வருகிறது.இதற்கு இடையில் தான் மத்திய அரசு தான் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.அதாவது,எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்துவதாக அறிவித்தது.அதாவது 2020-2021 மற்றும் 2021- 2022 ஆண்டுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எம்பிக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், ஈராண்டுகளுக்கு எம்பிகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது. எதிர்க்கட்சி எம்பிக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…