தோல்வி எதிரொலி ! காலியாகிறதா தமிழிசையின் தலைவர் பதவி

Default Image

தமிழக பாஜக தலைவராக தமிழிசை கடந்த  2014 ஆகஸ்ட் முதல் இருந்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை சற்று பரிதாபமாகதான் உள்ளது.தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக 4 தொகுதிகளில் போட்டியிட்டது.ஆனால் நான்கு தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது.அதிலும் பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை எடுத்துக்கொண்டால் தூத்துக்குடியில் தமிழிசை,கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன்,சிவகங்கையில் ஹெச்.ராஜா ,கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்,ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள் தான்.

எனவே தோல்விக்கு காரணம் கேட்டு பாஜக மேலிடமும் தமிழக பாஜ தலைவரை மாற்றவும் முடிவு செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக பாஜவில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.தோல்வியின் காரணமாக தற்போது தமிழக பாஜக தலைவரான தமிழிசை பதிவியில் இருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்