பெண்களை பற்றி பாஜக பேசுவதா? – ப.சிதம்பரம் கேள்வி

Default Image

திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக தலைவர்கள் தமிழகம் வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என்றும் அவர்கள் பேசப் பேச தான், தமிழக மக்கள் அவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது. வருமானவரித்துறை சோதனை பாஜகவுக்கு கைவந்த கலை. திமுக கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பெண்களை பற்றி பாஜக பேசுவதா? என கேள்வி எழுப்பிய அவர், பெண்களை பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும் என்றும் தேர்தல் ஆணையம் முழுமையான முறையில் செயல்படுகிறது என்பதை நம்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்