ஊராட்சி தலைவர் பதவி விலை ரூ.50 லட்சத்துக்கு ஏலம்,து.தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் ?

Default Image
  • தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
  • ஊராட்சி தலைவர் பதவி விலை ரூ.50 லட்சத்துக்கும்,துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்விடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் ஏலத்தில் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஏலத்தை ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடத்தியுள்ளனர்.இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.50 லட்சமும் ,துணை தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.இந்த ஏலத்தில் அதிமுகவை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஊராட்சி மன்ற  தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்துள்ளார்.துணை தலைவருக்கான பதவியை தேமுதிகவை சேர்ந்த முருகன் என்பவர் எடுத்துள்ளார் .இதற்கான ஏல தொகை வரும் ஞாயிறு 15-ஆம் தேதி செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகள் ஏலம்விடப்பட்டது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student