பாக். இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ?- கமல் ஹாசன் கேள்வி

Published by
Venu
  • சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
  • மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிப்பது அரசின் சூழ்ச்சி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்தது.இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.குடியரசு தலைவர்  இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த நிலையில் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது .பின்னர் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.இதனை கண்டித்தும் பல இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மதத்தின் பெயரால் மக்களின் உயிரை பறிப்பது அரசின் சூழ்ச்சி.மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை நான் ஓய மாட்டேன்.சமூகத்தை பொறுத்தவரை நானும் ஒரு மாணவன் தான். மாணவர்களுக்கு நடந்த அநீதிக்கு நானும் குரல் கொடுக்க வேண்டும்.

அதிகாரம் மக்களின் கையில் இருக்கும்வரைதான் அது ஜனநாயகம். பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம்? இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா ? என்றும் கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளித்தது தமிழினத்திற்கும் தேசத்திற்கும் செய்த துரோகம்.இது கட்சி , சாதியை எல்லாம் கடந்தது இந்த பிரச்சினை அதனால் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

 

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago