போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அனைத்து பேருந்திலும் பயணிக்க அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த மார்ச் 18 ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நிதிநிலைஅறிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், இன்று பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்று கூறுவது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை எவ்வாறு நடத்துவது, சாதாரண கட்டண நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அனைத்து பேருந்திலும் பயணிக்க அனுமதிக்கமுடியாது என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…