அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை என ஆளூர் ஷாநவாஸ் ட்விட்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அப்போது பேசிய அவர், இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினேன் என்று சொன்ன OPS, மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று இன்று சொல்கிறார். ஆனால், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை. அப்படியெனில், குருமூர்த்தி கம்யூனிஸ்டா? மோடி காங்கிரசா?’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…