அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை என ஆளூர் ஷாநவாஸ் ட்விட்.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அப்போது பேசிய அவர், இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்தினேன் என்று சொன்ன OPS, மோடி சொல்லித்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்று இன்று சொல்கிறார். ஆனால், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை என்கிறார் அண்ணாமலை. அப்படியெனில், குருமூர்த்தி கம்யூனிஸ்டா? மோடி காங்கிரசா?’ என பதிவிட்டுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…