தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா என பாஜக மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக தலைமை அலுவலகமான கமலாயம் செயல்படும் இடம் மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு கட்சி அலுவலகம் அமைத்ததால் மக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும், 30 கோடிரூபாய் மதிப்புள்ள அந்த கமலாலயம் கட்டிடத்தை திரு முக்தா சீனிவாசன் அவர்களை எப்படி மிரட்டி வெறும் ரூ. 3 கோடிக்கு வாங்கினார்கள் எனவும்,
அனைத்து மாவட்டத்திலும் பாஜகவிற்கு அலுவலகம் கட்ட இடம் வாங்கியதாகவும், அதற்கான பணத்தை எங்கு வசூல் செய்தீர்கள்..? அதற்கான அத்தாச்சி உங்களிடம் உள்ளதாக என தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் முருகன், தமிழக பாஜக தலைமை அலுவலகம் செயல்படும் இடத்தை ரூ.30 கோடி மதிப்புள்ளதென்றும் அதை ரூ.3 கோடிக்கு மிரட்டி வாங்கினார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய விலையையும், இப்போது இருக்கிற சந்தை மதிப்பையும் ஒன்றுபடுத்தி பேசியிருப்பது அவர் எத்தகைய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அவர் குறிப்பிட்டுள்ள படியே ரூ.30 கோடிக்கு நாங்கள் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். அவர் வாங்கிக் கொள்ள தயாரா..? என தெரிவித்துள்ளார்
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…