கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிப்பது சரியானதா? – டிடிவி தினகரன்

Default Image

கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா? என டிடிவி தினகரன் ட்வீட்.

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 

சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி 

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் வந்து சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

போலீசார் தடுத்து நிறுத்தம் 

காவல்துறையினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அனுமதியை மீறி தலைமை செயலகத்தை முற்றுகையிட முயல்பவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அனுமதியை மீறி நடப்பவர்கள் கைது செய்யப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் ட்வீட்..!

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உதவித்தொகையை உயர்த்திகேட்டு போராடுவதற்காகச் சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்