நேற்று முன்தினம் மாநிலங்களவையில் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.ஆனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இது தொடர்பான விவாதத்தில் மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தினந்தோறும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்றமா? அல்லது மசோதாக்கள் தயாரிக்கும் இடமா? என்று கேள்வி எழுப்பினார். மக்கள் எண்ணங்களுக்கு மாறான இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது; மக்களின் அமைதியே முக்கியம் ஆகும். மக்கள் மீது நம்பிக்கை இல்லாததால், நாடாளுமன்றத்தில் சாதிக்க நினைப்பதா? என்றும் கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த மத்திய அரசு மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…