பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி? என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுக்கும் துணிச்சல் குற்றவாளிகளுக்கு வந்தது எப்படி?
புகாரளித்து 13 நாட்கள் கழிந்து விட்டன; தாய்மார்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விட்டது; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விட்டது.
ஆனாலும் பழனிசாமி – அரண் போல் நின்று காப்பாற்றி வருவது நியாயமா? பெண்ணினத்திற்கே சாபக்கேடு! பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க. குற்றவாளிகளை காப்பாற்றினார்.
இன்னொரு பாலியல் வழக்கில் – ஐ.ஜி.யைக் காப்பாற்றி தன் மீதுள்ள வழக்குகளை நீர்த்துப் போக வைத்தார் முதலமைச்சர். விவசாயிகள் மீதே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த தனது கைத்தடியான சிறப்பு டி.ஜி.பி.யையும், செங்கல்பட்டு எஸ்.பி.யையும் பாதுகாத்து நிற்கிறார்.
தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் சிறப்பு டி.ஜி.பி மற்றும் எஸ்.பி யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும். ஒருவேலை தாமதித்தால் தேர்தல் ஆணையமே நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…