சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரசிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதைத்தொடர்ந்து சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த தமிழக மென்பொறியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் விமல் ஆவார்.இவர் சீனாவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த டிசம்பர் 19-ம் தேதி சீனாவில் இருந்து சென்னை வந்துள்ளார்.பின்னர் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்றவருக்கு கடந்த மூன்று நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தான் சீனாவில் இருந்து வந்ததாகவும் தனக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.இந்த தகவல் தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…