சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரசிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதைத்தொடர்ந்து சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த தமிழக மென்பொறியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் விமல் ஆவார்.இவர் சீனாவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த டிசம்பர் 19-ம் தேதி சீனாவில் இருந்து சென்னை வந்துள்ளார்.பின்னர் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்றவருக்கு கடந்த மூன்று நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தான் சீனாவில் இருந்து வந்ததாகவும் தனக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.இந்த தகவல் தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…