உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல். முருகன், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருப்பதாக கூறினார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய தலைவர்கள் தான் எப்போதும் கொள்கை முடிவு எடுக்கும். உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருப்போம், ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல என எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக எதிர்கொண்ட நிலையில் 4 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…