#BREAKING: தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

Default Image

தமிழ்நாடு முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க்  தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக ஏ.டி துரைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.மல்லிகா நியமிக்கப்பட்டுள்ளார். ஊர்க்காவல்படை கூடுதல் கமாண்டன்டாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் காவல்துறை நடவடிக்கைகள் பிரிவு ஏ.டி.ஜி.பியாக பால நாகதேவி  நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும்,  நெல்லை மாநகர காவல் ஆணையராக ஐ.பி.எஸ் சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையராக ஐ.ஜி டி.செந்தில்குமார் நியமனம். தமிழ்நாடு முழுவதும் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவலர்கள் நலப்பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி  ஆயுஷ்மணி  திவாரிக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி மகேஸ்வர் தயாளுக்கும்  கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரி சுமித் சரணுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  பொருளாதார குற்றப்பிரிவு  ஐ.ஜி.யாக உள்ள அபின் தினேஷ் மோடக்குக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி சஞ்சீய்குமார் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.கே செந்தாமரைக்கண்ணன் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.ஜி.யாக உள்ள வி வனிதா பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னையில் ரயில்வே பணியில் டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்