IPL2018 :ஐ.பி.எல். போட்டிகள் குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும் ?- அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

இன்று அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஐ.பி.எல். போட்டிக்கான எதிர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்துவதா, வேண்டாமா? என்பதை கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

‘ஐ.பி.எல். போட்டிகளை நடத்தாமல் இருந்தால் நல்லது. போட்டி நடந்தால் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். போட்டிகளை புறக்கணிப்பது குறித்து ரசிகர்கள் முடிவு செய்யட்டும். போட்டியை நிறுத்த யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். போட்டிகளை நடத்தினால் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சென்னையில் நாளை நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியை நிறுத்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் திட்டமிட்டபடி நாளை சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. எனவே, நாளை போட்டி தொடங்கும்போது சேப்பாக்கத்தில் போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

47 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago