முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது- அமைச்சர் எம்.சி.சம்பத்

Default Image

முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்ட பேரவையில் பேசுகையில்,உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அதுபோல் 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி விலகிய பிறகும், ஒசூர் தொகுதி காலியாக அறிவிக்கப்படாதது ஏன்? என்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

பின்னர்  சட்ட பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதில் அளித்தார்.அதில்,முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.304 நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்