நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
புதுச்சேரி வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. கடலூரில் இருந்து 40 கி.மீ, சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் கரையை கடக்கிறது நிவர் புயல்.
இந்த புயல் தற்போது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதிதீவிர புயலான நிவர்-ன் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 22.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி 18.7 செ.மீ., சென்னை 8.9 செ.மீ., காரைக்கால் 8.4 செ.மீ., நாகையில் 6.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருவதால், கடலூர் மற்றும் புதுச்சேரி சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…