பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக்த்தில் குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னையில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் ஏத்தனையோ ஜிபிஎஸ் நிறுவனங்கள் இருந்தும், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஹரியானாவை சேர்ந்த அந்த குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் கருவியை மட்டும்தான் பொறுத்தவேண்டும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது மட்டும்தான் பொருத்தவேண்டும் என்பது சட்ட விரோதமானது இதனால் அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கு குறித்து விளக்கமளித்த தமிழக அரசு, கால அவகாசம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 18-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, 8 நிறுவனங்களின் கருவிகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…