உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாது – ஈபிஎஸ் தரப்பு

Default Image

முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார் என ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது. தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் உள்ளது.

பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைமை என்பது ஒற்றைத்தலைமையாக இருக்க வேண்டும் எனவும், மனுதாரர் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக்க வேண்டும் என்று ஒரே குரலாக பேசினர். முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார்; கட்சியில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது, ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு அதனை முடக்குவது போல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்