கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்தை சந்தித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியான 2 லட்சத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் என்கிற முறையில் விமல்ராஜ் உயிரிழப்பு ஏற்கமுடியவில்லை என்றும், விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர் வீடியோவை பலகோடி பேர் பார்த்து மனவேதனை அடைந்ததாகவும், நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு தேவையானதை செய்ய என கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது எனது தெரிவித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…