கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் – அமைச்சர் மெய்யநாதன்

Default Image

கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.

இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்தை சந்தித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியான 2 லட்சத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் என்கிற முறையில் விமல்ராஜ் உயிரிழப்பு ஏற்கமுடியவில்லை என்றும், விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர் வீடியோவை பலகோடி பேர் பார்த்து மனவேதனை அடைந்ததாகவும், நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு தேவையானதை செய்ய என கூறியுள்ளார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது எனது தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்